Wednesday, April 27, 2011

கவிஞர் அஸ்மின் மலேசியா பயணம்.


இந்தத் தகவல்கள் துபாயிலிருந்து வெளிவரும் ''ஊடகம்'' மற்றும்  பொத்துவில் இணையத்தளம் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன.

 விஞரும், பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எதிர்வரும்
மே மாதம் 20, 21,22 ம் திகதிகளில் மலேசியா கோலாலம்பூரில் நடைபெறவுள்ள உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் இடம்பெறும் கவியரங்கில் கவிதை வாசிக்க தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் மே மாதம் 19ம்திகதி மலேசியா செல்ல இருக்கின்றார்.

இலங்கையில்  மரபுக்கவிதை எழுதிவரும் இளம் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான பொத்துவில் அஸ்மின் மாநாட்டு கவியரங்கத்துக்கு சமர்ப்பித்த அண்ணலாரின் அழகிய குணங்களில் - 'பொறுமை'என்னும் தலைப்பில் அமைந்த மரபுக்கவிதை  இலங்கை ஏற்பாட்டுக்குழுவின்  தேர்வுக்குழுவால் நடத்தப்பட்ட போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வசந்தம் TVயின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் இருக்கும் இவர்  ஏலவே அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற கவிதைப் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு பத்துக்கும் மேற்பட்ட தடவை வெற்றியீட்டி 'ஜனாதிபதிபதி விருது', பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்சங்கத்தின் 'தங்கப்பதக்கம்', சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது உட்பட ஏழு விருதுகளைப் பெற்றுள்ளார்.

ஒரு தசாப்த காலத்துக்கும்  மேலாக இலங்கையின்  இலக்கியத்துக்கு தன் படைப்புக்கள் மூலம் பங்களிப்பு செய்து வரும் இவரது படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள்,சஞ்சிகைகள்,சர்வதேச தமிழ் சஞ்சிகைகளிலும்,இணைய சஞ்சிகைகளிலும்,இலத்திரனியல் ஊடகங்கள் பலவற்றிலும்  களம் கண்டுள்ளன.

சக்தி TV யின் 'இசை இளவரசர்கள்' நிகழ்ச்சி மூலம் பாடலாசிரியராக அறிமுகமான இவர் செவ்வேள் தயாரிக்க இயக்குனர் கேசவராஜ் இயக்கும்  'பனைமரக்காடு' திரைப்படத்தில் பாடல்களை எழுதியிருக்கின்றார். இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்து பாடிய இவரது 'எங்கோ பிறந்தவளே...'பாடல் இலங்கையில் மட்டுமல்லாது புலம்பெயர் நாடுகளிலும் இவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.

'விடைதேடும் வினாக்கள் (2000)', 'விடியலின் ராகங்கள்'(2001), என்ற இரண்டு கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கும் கவிஞர் பொத்துவில் அஸ்மினின் 'ரத்தம் இல்லாத யுத்தம்' கவிதை நூல் மிக விரைவில் வெளிவர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி
*ஊடகம் (துபாய் -ஜாபர் சாதீக்)
*பொத்துவில் இன்போ (ஜே.எம்.ஹிஜாஸ்)

Tuesday, April 26, 2011

கவிஞர் அஸ்மின் மலேசியா பயணம்.

 விஞரும், பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் எதிர்வரும்
மே மாதம் 20, 21,22 ம் திகதிகளில் மலேசியா கோலாலம்பூரில் நடைபெறவுள்ள உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் இடம்பெறும் கவியரங்கில் கவிதை வாசிக்க தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் மே மாதம் 19ம்திகதி மலேசியா செல்ல இருக்கின்றார்.


இலங்கையில்  மரபுக்கவிதை எழுதிவரும் இளம் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான பொத்துவில் அஸ்மின் மாநாட்டு கவியரங்கத்துக்கு சமர்ப்பித்த அண்ணலாரின் அழகிய குணங்களில் - 'பொறுமை'என்னும் தலைப்பில் அமைந்த மரபுக்கவிதை  இலங்கை ஏற்பாட்டுக்குழுவின்  தேர்வுக்குழுவால் நடத்தப்பட்ட போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


வசந்தம் TVயின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் இருக்கும் இவர்  ஏலவே அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற கவிதைப் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு பத்துக்கும் மேற்பட்ட தடவை வெற்றியீட்டி 'ஜனாதிபதிபதி விருது', பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்சங்கத்தின் 'தங்கப்பதக்கம்', சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது உட்பட ஏழு விருதுகளைப் பெற்றுள்ளார்.


ஒரு தசாப்த காலத்துக்கும்  மேலாக இலங்கையின்  இலக்கியத்துக்கு தன் படைப்புக்கள் மூலம் பங்களிப்பு செய்து வரும் இவரது படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள்,சஞ்சிகைகள்,சர்வதேச தமிழ் சஞ்சிகைகளிலும்,இணைய சஞ்சிகைகளிலும்,இலத்திரனியல் ஊடகங்கள் பலவற்றிலும்  களம் கண்டுள்ளன.


சக்தி TV யின் 'இசை இளவரசர்கள்' நிகழ்ச்சி மூலம் பாடலாசிரியராக அறிமுகமான இவர் செவ்வேள் தயாரிக்க இயக்குனர் கேசவராஜ் இயக்கும்  'பனைமரக்காடு' திரைப்படத்தில் பாடல்களை எழுதியிருக்கின்றார். இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்து பாடிய இவரது 'எங்கோ பிறந்தவளே...'பாடல் இலங்கையில் மட்டுமல்லாது புலம்பெயர் நாடுகளிலும் இவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.



 'விடைதேடும் வினாக்கள் (2000)', 'விடியலின் ராகங்கள்'(2001), என்ற இரண்டு கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கும் கவிஞர் பொத்துவில் அஸ்மினின் 'ரத்தம் இல்லாத யுத்தம்' கவிதை நூல் மிக விரைவில் வெளிவர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி
*ஊடகம் (துபாய் -ஜாபர் சாதீக்)
*பொத்துவில் இன்போ (ஜே.எம்.ஹிஜாஸ்)



Monday, April 25, 2011

தேசிய விருது பெற்ற பாடல் - 2011


லங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் முதலாமிடம் பெற்று 2010ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடல்வரிகளுக்கான விருதினை பெற்றுக்கொண்ட பாடல்.



பாடல்:புறப்படு தோழா...
இசை:டிரோன் பெர்ணன்டோ
பாடல் வரிகள்: கவிஞர் பொத்துவில் அஸ்மின் 

பாடியோர்: ஜனனி ஜெயரத்னராஜா & டிரோன் பெர்ணன்டோ

Sunday, February 20, 2011

மாநபியே துயரின் மாமருந்தே...(புதிய இஸ்லாமிய கீதம்)




பாடலாசிரியர்: கவிஞர் பொத்துவில் கவிஞர் அஸ்மின்  
பாடகி:ஷைபா பேகம்( இலண்டன்)
 
பல்லவி

மாநபியே.. மாநபியே...
மாநபியே துயரின் மாமருந்தே..
மறையளித்த உலகின் தேன்கரும்பே....
(மாநபியே..)

உயர்தீனின் பூரணமே...
உண்மை ஒளிரும் தோரணமே
இறைமறையை நாங்கள் பெற
நபி நீங்கள் காரணமே...!
மக்கள் அறியாமை விட்டுத் தெளிவாக
வழிகாட்டிய ஒளிதானே...

(மாநபியே..)

சரணம்-1

மக்கா நகர் காபிர்கள்
சிக்கல்பல செய்தாலும்
பக்குவமாய் நீர் இருந்து
பாவிகளை பொறுத்தீரே..
தக்கபடி நாம் வாழ
அக்கறையாய் இருந்தீரே
திக்கு எட்டும் தீனை நட்டு
தீமைகளை அறுத்தீரே...

எதிர்காலம் நிகழ்காலம்
கூறும் இறைவேதம்
தந்த தூதரே நபிநாதரே...
என்றும் உங்கள் வழிநடப்போம்
 (மாநபியே..)                                                                     

சரணம்-2

எல்லாம் வல்ல இறையோனை
எங்கும் உள்ள மறையோனை
அல்லாஹ்வினை மட்டும் நாங்கள்
அடிபணியச் சொன்னீரே...
ஒன்றுமில்லா எளியோரை
ஒதுக்கவேண்டாம் என்றீரே
வறுமை வந்து வதைத்த போதும்
பொறுமையுடன் நின்றீரே...

மார்க்கம் இறை மார்க்கம்
மீட்கும் கரை சேர்க்கும்
நேர்வழி என்றும் செல்கிறோம்
உங்கள் நிழலில் நாமிருப்போம்...

ஈழத்தின் புதிய மெல்லிசைப்பாடல்-2011


Tuesday, February 8, 2011

2010ஆம் ஆண்டுக்கான 'சிறந்த பாடலாசிரியருக்கான' தேசிய விருது


இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு  தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் முதலாமிடம் பெற்று
 2010ஆம் ஆண்டுக்கான 'சிறந்த பாடலாசிரியருக்கான' தேசிய விருதை பெற்றுக்கொடுத்த பாடல்.








புறப்படு தோழா-வண்ண
பூக்களாய் உலகை மாற்றலாம்
நீ இன்று நினைத்தால்-அந்த
நிலவிலும் கொடியை ஏற்றலாம்

இளைஞனே உன்னைநீ ஆளடா...
இன்னும்நான் சொல்கிறேன் கேளடா...
கவிஞர்கள்  உழைப்பிலே கவிதைகள் அரங்கேறும்-எங்கள்
இளைஞர்கள்  உழைப்பிலே  உலகமே திசைமாறும்....

(புறப்படு தோழா)



உன்னைநீ உனக்குள்ளே தேடடா!- அந்த
விண்ணைநீ காலின்கீழ் போடடா!
உண்மைநீ என்றுமே கூறடா!-இந்த
உலகமே வியக்குமே பாரடா..!

சோதனை தொடர்ந்துவந்தால் சோர்ந்துதான் போவாயா...?
சாதனை நீபடைக்க  சக்தியுடன் எழுவாயா...?
எழுந்துவா இளமுல்லையே-அந்த
வானம்தான்  உன் எல்லையே.....

(புறப்படு தோழா...)

உணர்வுக்குள் நம்பிக்கை நாட்டடா...-நீ
உலகுக்கே யாரென காட்டடா...
நேசத்தை நெஞ்சுக்குள் மாட்டடா-உன்
தேசத்தை அன்பினால் மாற்றடா....

ஏழைகள் என்னும் சொல்லை எரிக்கலாம் வருவாயா..?
என்னுயிர் தோழா உந்தன் கரங்களை தருவாயா...?
தோல்விகள்  உனக்கில்லையே-இனி
வெற்றிதான் உன் பிள்ளையே...!


இசையமைப்பு: டிரோன் பெர்ணாண்டோ
பாடல்வரிகள்: கவிஞர் அஸ்மின் 

பாடியோர்:ஜனனி ஜெயரத்னராஜா& டிரோன்